‘கோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் 2ஆம் பாகத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம். ‘கோ2’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ், பாலசரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் முதல் 3 நாட்களில் தமிழகமெங்கும் நாலரை கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அறிமுக இயக்குனர் சரத் இயக்கிய இந்த பொலிடிக்கல் த்ரில்லர் தமிழக தேர்தல் சமயத்தில் வெளிவந்ததும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்க இன்னொரு காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, சரத் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம் பாபி சிம்ஹா. ஆக்ஷன் த்ரில்லராக உருவாக உள்ள இப்படத்தில் பாபி சிம்ஹா போலீஸ் கேரக்டரில் நடிப்பார் எனத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...
மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவன தயாரிப்பில் உருவாகி வரும் படம் ’வானம் கொட்டட்டும்’. இந்த...
மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனம் தயாரிக்கும் படம் ’வானம் கொட்டட்டும்’. மணிரத்னத்திடம் உதவி...