குறும்படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனர்களாக அறிமுகமானவர்களின் பட்டியலில் ‘மாயா’ படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணனுக்கும் முக்கிய இடமுண்டு. பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘மாயா’வில் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்திருந்தார். கடந்த வருடம் வெளிவந்த இப்படம், விமர்சனரீதியாக ‘ஹாலிவுட் தர’ ஹாரர் த்ரில்லர் என்ற பெயரைப் பெற்றதோடு, தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய லாபம் சம்பாதித்துக் கொடுத்த படமாகவும் அமைந்தது.
தற்போது, அஸ்வின் சரவணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளிவந்துள்ளது. இப்படத்தை, ‘மோமன்ட் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஜி.ஏ.ஹரி கிருஷ்ணன் தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கான நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி வந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் அனைத்து...
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து சென்ற வருட தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் ‘பிகில்’....