ஜீவா நடித்து சமீபத்தில் ரிலீசான படம் ‘திருநாள்’. இந்த படத்தை தொடர்ந்து ஜீவா, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ள ‘கவலை வேண்டாம்’ என்ற படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இயக்குனர் அட்லி தயாரிப்பில் ஜீவா, ஸ்ரீதிவ்யா இணைந்து நடிக்கும் ‘சங்கிலி பங்கிலி கதவ தொற’ படத்தின் படப்பிடிப்பும் தற்போது நடந்து வருகிறது. இப்படங்கள் தவிர ‘திருநாள்’ படத்தை தயாரித்த ‘கோதண்டபானி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் அடுத்து தயரிக்கும் ‘நெச்ஞமுண்டு நேர்மையுண்டு’ படத்திலும் ஜீவா தான் கதாநாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ஜெ.எம்.அருண் இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க லட்சுமி மேனனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்றும் அநேகமாக இப்படத்தில் ஜீவாவுடன் லட்சுமி மேனன் நடிப்பது உறுதியாகி விடும் என்றும் கூறப்படுகிறது. தற்போது விஜய்சேதுபதியுடன் லட்சுமி மேனன் இணைந்து நடித்து வரும் ‘ரெக்கை’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாம். ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படத்தில் லட்சுமி மேனன் நடிக்க ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் இது ஜீவாவுடன் அவர் நடிக்கும் முதல் படமாகும்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி வந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் அனைத்து...
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து சென்ற வருட தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் ‘பிகில்’....