‘துருவங்கள் பதினாறு’ படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள ‘நரகாசூரன்’ படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கும் படம் ‘நாடகமேடை’. இந்த படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் ஜெயராம் மகன் காளிதாஸ் நடிக்க தேர்வு ஆகியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தை தொடர்ந்து காளிதாஸ் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘ஒரு பக்க கதை’. பாலாஜி தரணீதரன் இயக்கியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக் நரேன் அடுத்து இயக்கும் ‘நாடகமேடை’ படத்திற்கு ‘மாயா’ படப் புகழ் ரான் ஏதன் யோஹான் இசை அமைக்கிறார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார். ‘நாடகமேடை’யின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவிருக்கிற்து.
#KarthikNaren #Dhuruvangal16 #Naragasooran #AravindSwami #IndrajithSukumaran #SandeepKishan #Shriya #Aathmika #NaadagaMedai #Kalidas
‘துருவங்கள் பதினாறு’ படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’. அரவிந்த்சாமி,...
‘துருவங்கள் பதினாறு’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் அடுத்து வெளியாக இருக்கும் படம்...
‘துருவங்கள் பதினாறு’, ‘நரகாசூரன்’ ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் நரேன். இதில், அரவிந்த்சாமி,...