சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து நாளை முதல் புதிய திரைப்படங்கள் வெளியாகும் என்றும் படப்பிடிப்புகள் தொடங்கும் என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் விஷார்ல் பேசும்போது,
‘‘தமிழ் சினிமாவின் மறு சீரமைப்புக்காக நடந்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த ஃபெப்சி அமைப்பு உட்பட அனைத்து அமைப்புகளுக்கும், இந்த பிரச்சனையை முடுவுக்கு கொண்டுவர உதவிய த தமிழக அரசுக்கும் நன்றி! தமிழ் திரைத்துறை வரும் ஜூன் மாதம் முதல் முழுமையாக கணினி மையமாக்கப்படும். இனி முழு வெளிப்படைத்தன்மையோடு தமிழ் சினிமா இயங்கும்! தயாரிப்பாளர் சங்கமே டிக்கெட் விற்பனை இணையதளத்தை துவங்கும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகபட்ச டிக்கெட் விலைக்கு மேல் எங்கும் டிக்கெட் விற்கப்படாது. அது கண்காணிக்கப்படும். அதை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா வெளியீட்டை முறைப்படுத்த ஒரு குழு அமைத்து அதன் மூலம் பட்டியலிட இருக்கிறோம். கடந்த 16-ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகள் வெள்ளிக்கிழமை (20-4-18) முதல் தொடங்கும். சம்பளம் தொடர்பாக நடிகர்களுடன் பேச வருகிற சனிக்கிழமை எல்லா நடிகர்களையும் சந்திக்கிறோம். சம்பள விவகாரம் குறித்து அதற்கு பின்னர் தெரிவிக்கப்படும். ‘காலா’ படம் வெளியீட்டு தள்ளிப் போகிறது. தனுஷ் மற்றும் ‘வுண்டர்பார்’ நிறுவனத்திற்கு நன்றி! அவர்களின் ஒத்துழைப்புக்கு நன்றி! ‘காலா’ ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வேறு ரிலீஸ் தேதியை ‘காலா’ படக்குழுவினர் பின்னார் அறிவிப்பார்கள். தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுக்க டிக்கெட் விற்பனை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்’’ என்றார் விஷால்!
இந்த பேட்டியின்போது விஷாலுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, மற்றும் எஸ்.எஸ்.துரைராஜ், ஆர்.கே.சுரேஷ், உதயகுமார், உதயா, பிரவீன்காந்த், ‘மிட்டாய்’ அன்பு, எஸ்.எஸ்.குமரன் ஆகியோரும் இருந்தனர்.
#TamilCinema #Kollywood #Strike #TFPC #NadigarSangam
தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நாஞ்சில் நளினி நேற்று சென்னையில் காலமானார்....
இன்று நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் விவசாயிகள் சார்ந்த பிரச்சனைகள் தான்! இதை மையமாக...
நடிகர் சங்கத்துக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வருகிற 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது....